Tuesday, 25 October 2016

தமிழ் நமது அடையாளம் சமுதாயம் நாம் தமிழர் என்பதற்கு அடையாளம்

என் அண்ணன்மார்களுக்கும்
என் தம்பிமார்களுக்கும் வணக்கம்...
இங்கே சில பேர் தமிழ்தேசியம் பேசுகின்றர்
அதில் தவறில்லை...தமிழர் என்பது நம் அனைவரின்
அடையாளம் , ஆனால் பரதர் சமுதாயம் என்பது நமக்கு தமிழர் என்கின்ற அடையாளம்...
சமுதாயத்தை இழந்தால் இவர்களே நம்மையே
திராவிடர் என்று அடையாளம் காட்டிருப்பார்.
தமிழ் இனப்பற்று தேவை அதைப்போல்
சமுதாய உணர்வும் தேவை..
இல்லையெனில் நாமும் இங்கே நாளை..
அகதிகளே...
தமிழர் என்று சொல்லும் போதும்...
தமிழர் என்பதின் நமது அடையாளமான
நமது சமுதாயத்தின் மீது உணர்வு கொள்வீர்...

Jp சந்திரபாபு கல்லறையை சுத்தம் செய்து மரியாதை செலுத்திய ஒரு இயக்குனர்

https://youtu.be/IBQXQFZChXM

கொற்கைப் பாண்டியர் "பரதர்"

"செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு By DIN | Last Updated on : 13th October 2016 03:59 AM | அ+அ அ- | கொற்கை பாண்டியரின் 'செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயம். கொற்கை பாண்டியரின் செழியன் பெயர் பொறித்த வெள்ளி நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். இது குறித்து இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியது: நான் அண்மையில் மதுரை சென்றிருந்த போது, எனது நண்பர் ஒருவர் தான் பாதுகாப்பாக வைத்திருந்த இரண்டு சிறிய வெள்ளித் தகடுகளை என்னிடம் கொடுத்தார். அவற்றை சென்னைக்கு கொண்டு வந்து சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து பல நாள்கள் ஆய்வு செய்தபின், இரண்டு தகடுகளில் ஒன்று, சங்க கால வெள்ளி நாணயம் என்பது உறுதியானது. அந்த நாணயத்தை பற்றிய விளக்கம்: முன்புறம்: நாணயத்தின் முன்புறத்தில் வலப்பக்கம் நோக்கி, மன்னரின் தலை உள்ளது. தலையின் மேல் ஒரு கிரீடம் உள்ளது. அந்த கிரீடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம், நெற்றியிலிருந்து பின் நோக்கி, பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்துக்கு எதிரே, மேலிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள், தமிழ்பிராமி எழுத்து முறையில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் எழுத்து, "செ' இரண்டாவது எழுத்து, "ழி' மூன்றாவது எழுத்து, "ய' நான்காவது எழுத்து, "ன்' சேர்த்து படிக்கும்போது, செழியன் என்ற பெயர் வருகிறது. "ய' எழுத்து முழுமையாக இல்லை. வலதுபக்கம் அடிப்பகுதியில் உள்ள வளைவு தெளிவில்லாமல் உள்ளது. அந்தப் பகுதியில் வட்ட வடிவிலான ஒரு பள்ளம் இருக்கிறது. பின்புறம்: எளிதில் படிக்க முடியவில்லை. நாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் முன் காலுக்கு அருகே பானை போன்ற ஒரு சின்னம் உள்ளது. அந்த மனிதனின் இடுப்பிலிருந்தும், தோள் பட்டையின் கீழ் இரண்டு கைகளுக்கிடையிலிருந்தும் கயிறுகள் மேல் நோக்கி செல்வது போல் அச்சாகியுள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன், கொற்கைப் பாண்டியர்கள் தங்கள் கடற்பகுதியில் விளைந்த முத்தை, போர் கைதிகளைப் பயன்படுத்தி முத்துச் சிப்பிகளை அறுவடை செய்ததாக, நுôலில் படித்த நினைவு இருக்கிறது. உலகின் சிறந்த முத்துக்கள் இங்கு விளைந்ததால், கிரேக்கர்களும், ரோமானியர்களும், வெள்ளிக் கட்டிகளையும், தங்கக் கட்டிகளையும் கொடுத்து முத்துக்களை வாங்கி சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, மாறன் மற்றும் செழியன் பெயர் பொறித்த நாணயங்கள் வெளிவருவது கண்டு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு திகைப்பு ஏற்படுகிறது. அசோக பேரரசர் தன் கல்வெட்டில் கூறியுள்ள, தம்பிரபருணி நாடு, கொற்கைப் பாண்டியர்களது நாடுதான் என்பதை, வருங்கால கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என்றார் இரா.கிருஷ்ணமூர்த்தி.

அமரர் ஐயா செவாலியர் J.L.P ரோச் விக்டோரியா

தூத்துக்குடியின் பெருந்தகை....
அமரர் ஜயா செவாலியே JLP. ரோச் விக்டோரியா பிறந்த தினம்

(26.09.1894)

வரலாற்றுப்பதிவு
-------------------------------

தூத்துக்குடி நகரசபை தலைவராக 1926 முதல் 1946 வரை, ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை சட்டசபையில் M.L.C. (1924)
தூத்துக்குடி துறைமுகக் கழகம் துவங்கியது முதல் நெடுங்காலமாக அதன் உறுப்பினர், இரு முறை துணைத் தலைவர்,
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1937),
நியமன உறுப்பினர் (1944-45),
தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சபை உறுப்பினர் (1948),
குமாரசாமிராஜா அமைச்சரவையில் உணவு மற்றும் மீன்துறை அமைச்சர் (1949-52),
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1953-57),
ரோட்டரி கவர்னர் (South India & Sri Lanka) 1948-49,
இவை மட்டுமின்றி சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராகவும்,
அனைத்துலக ரோட்டரி கிளப் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ஸ்தாபகர்
இந்திய கிராம முன்னேற்றத்திற்காக மாதிரி கிராமமான ‘மங்களகிரி’யை தூத்துக்குடி அருகே நிறுவியவர்
அனைத்து இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் (டில்லி) உறுப்பினர்.
அனைத்து இந்திய வயது வந்தோர் கல்விக் கழக துணைத்தலைவர் (டில்லி),
இந்திய குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக 1959ல் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற (R.I.325 மாவட்ட) மாமன்றத்தில் கலந்து கொண்டவர்,
இவைமட்டுமின்றி ஏழை எளியவர்க்கு உதவும் நன்மனம் கொண்ட கொடையாளி, சிறந்த தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்.
நல்ல கத்தோலிக்க, எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். இதுபோன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

1952ல் திருத்தந்தை12ம் பத்திநாதரால், ‘செவாலியர்’ (Order of knight of St. Gregory) பட்டம், திருச்சபைக்கும், நாட்டிற்கும் அவராற்றிய தொண்டுகளுக்காக வழங்கப்பட்டது. இவரின் பணிகளும், வகித்த பொருப்புகளும் எண்ணற்றவை.

இவர் தனக்குச் சொந்தமான இடங்களை தூத்துக்குடி பழைய கோர்ட் (தற்போதைய P.W.D. Office), நகர சந்தை (Market), 12வாசல் மையவாடி (நகராட்சி மையவாடி), மருத்துவமனை, தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் (அமரர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நினைவு கட்டிடம்), இரயில்வே நிலையம் ஆகியனவற்றிக்குத் தந்தது மட்டுமன்றி அதனைக் கட்டியும் கொடுத்தார்.

இவர் தனது 68வது வயதில் 1962 அக்டோபர் 15ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் திரு உருவச்சிலை அவரின் நினைவாக உள்ள தூத்துக்குடி ரோச் பூங்காவில், தூத்துக்குடி பரத மகாஜன சங்கம், J.L.P. Roche Victoria நினைவுக்குழு மற்றும் திருமந்திர நகர் பொதுமக்களால் 02.05.1965 அன்று மேதகு Thomas Fernando D.D. DCL, Bishop of Tuticorin அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.