Wednesday, 9 August 2017

நெய்தல் பரதா !

நெய்தல் நில உறவுகளுக்கு வணக்கம் !

பார் போற்ற வாழ்ந்த இனம் பரதர் என்பதில் ஐயமில்லை !  நெய்தல் நிலத்தில் தலைமகனாக ! மீன் கொடி கட்டி
ஆண்டு பாண்டியனாக ! அதன் எச்சங்கள் இன்று பல போர்வைகள் கொண்டு மூடப்பட்முள்ளதை நம் கண் கூட காண முடியும் ! தூத்துக்குடியில் நம் கடைசி மன்னரான பரதவர்ம பாண்டியாபதி (தேர்மாறன்) அவர்களின் அரண்மனை இன்று ஒட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வருடம் நம் பரதர் மாதா திருவிழாவிற்கு சென்றிருந்த போது அங்கே செல்ல முயன்றோம் அப்போது ஒருவர் வந்து தம்பி இது ஒட்டல் உள்ளே எல்லாம் போக முடியாது இது அரண்மனையாக இருந்தாலும் இப்போது இது எங்கள் இடம் என்றார். அந்த நொடி இதயம் சற்று கணத்தது பார் புகழ்ந்த ஐயா தொன் கபிரியேல் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியன் அவர்கள் வாழ்ந்த அரண்மனக இன்று ஓட்டலா ?  இது மட்டுமா இன்னும் எத்தனை அவர் கல்லறை கல்வெட்டு தூத்துக்குடி லசால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சாக்கடையில் கிடந்தது உலக புகழ் பெற்ற தூத்துக்குடி மாதா தேரை கட்டியவர் இவர் தான் இவருக்கு கொடுக்கப்பட மரியாதையை நன்றாக பாருங்கள் !

இது மட்டுமா தூத்தக்குடியின் அனைத்து சமுதாயத்தவரும் போற்றும் வகையில் வாழ்ந்த தூத்தக்குடி மாநகருக்கு தண்ணீர் தந்த இராவ் பகதூர் குரஸ்பர்னாந்து நிலமையும் சொல்ப்போனால் இப்படித்தான் என்ன சிலை மட்டும் ஒரு பேருக்கு வச்சிருக்காங்க ! இந்த மாநகராட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் இவர் !

சரி நடந்தது நடந்தது நடந்து முடிந்தது தூக்கி போடுவோம் ! நான் இங்கே கேட்கும்கேள்வி ?  நாளைய நம் இனத்திற்கு நமது நன்றிக்கடன் என்ன ? நம் பெற்றோர் செய்ய மறந்ததை நாம் செய்யப்போகிறோதா இல்லையா ?

எங்கோ ஒரு மீனவன் கடலில் இறக்கிறான் என்றால் உங்களுக்கு வலிக்குமா ? வலிக்காதா ? மனம் துடிக்குமா துடிக்காதா ?

எனது கேள்விகள் அனைத்தும் இன்றைய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் என எம் வருங்கால சமுதாயத்திடம் மட்டுமே !

நமக்கு பிரச்சனைகளே கிடையாதா ?

பெரும் பிரச்சனை மீனவர் பிரச்சனை
அதை தடுக்க நம் இனம் போதாதா ? போதும் ஆனால் ஒன்றுபட வேண்டும் ! அதுதான் முடியவில்லை !

நம் சமுதாயத்தில்  படித்தவர்களே இல்லையா ? ஏன் அரசு துறைகளில் ஒருவரை கூட காண முடிவதில்லை ?

எங்கே சென்றனர் ? 

உங்களைத்தான் கேட்கிறேன் எங்கே செல்லப்போகிறீர்கள் யாரையோ சொல்வது போல் படிக்காதீர்கள் உங்களை பற்றி தான் பேச போகிறீர்கள் உங்களால் கலைக்டர் ஆக முடியாதா ? சமுதாய உணர்வு உண்டா சமுதாயத்திற்கு  எதாவது செய்யனும் என்று ஆசை இருக்கிறதா ?  அப்போம் கலைக்டர் ஆகலாமே அது இல்லாட்டி அதற்கு அடுத்து
ஐ.பி.எஸ் ஆகலாம் !  ஐ.பி.எஸ் ஆகி எதாவது உதவி பன்னலாமே இப்படி இந்த இரண்டு இல்ல ஆயிரம் இருக்கு ! அனைத்திலும் அமரலாமே ?

சரி அரசு துறை இருக்கட்டும்.

தொழில் பற்றி பேசுவோம்.

நம்ம ஆட்கள் ஒரு தொழில் செய்றாங்க ஒரு வியாபாரம் அதற்கு நம்ம ஆதரவு அளிக்க வேண்டுமா ? கூடாதா ? அங்கே என்ன பொருள் வச்சிருக்காரோ அந்த பொருள நம்ம ஆட்கள் கிட்ட போய் வாங்குங்க ! அப்போம் தான் தொழில் துறையிலும் முன்னேற முடியும்  !

அடுத்து திருமணம் !

இது தான் நான் பேசுன அந்த எதிர்காலத்தற்கு அஸ்திவாரம் இதை ஒழுங்கா போட்டாத்தானே ஏதிர்காலம்னு ஒன்னு இருக்கும் இல்லன்னா இல்லாமலே போகும் !

சகோதரர்களே ! சகோதரகளே !

இதைப்பற்றி பல பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.அதனால் சுறுக்கமாகவே கூறுகிறேன். தயவு செஞ்சி கலப்பு திருமணம் செய்யாதீங்க காதல் உங்க கண்ண மறைக்கும் கொஞ்சம் சிந்திங்க ! நீங்க பிறந்து வந்த இனத்த ! இது வாழனுமா ?
அழியனுமா ?

பிரச்சனைகளை பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கிட்டேத்தான் இருக்கனும் இப்படி !

நம் சமுதாயத்தின் நாளைய மாற்றம் இன்றைய இளைஞர் கூட்டம் ! அதிலும் முதன் முதலாய் எம் சகோதரிகள் கூட்டம் !

நீங்களின்றி நம் இனம் மாறாது !

நடந்ததை மறப்போம் ! நாளை நல்லதென அமைப்போம் !
சிறுதுளி கடலாய் இணைவோம் !

எம் பரத குல இளைஞர் , இளம்பெண்களே !
விழித்துக்கொள் ! நாம் நம் இனத்திற்காக செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு !
தூக்கிவிட வேண்டிய பொறுப்பும் உண்டு !

ஒன்றுபடுவோம் !  வெற்றிப்பெறுவோம் !

உங்கள் அன்பு சகோதரன் !

நெய்தல் தமிழன் !
     - இருதய ஆஸ்ட்ரோ.த