Friday, 21 October 2016

விடுதலைப் போராளி ஜே.பி.ரொட்ரிக்ஸ்

இந்தியவெங்கும் சுதந்தரப்போராட்டம் மிக தீவரமாக நடந்து கொண்டிருந்த காலம்
அது.தென்தமிழகத்திலும்_அறவழியிலும் ,வன்முறையிலும் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ராஜாஜியின் தலைமையில் சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன்
உப்பு சத்தியாகிகரகத்தில் முனைப்புடன் கலந்துகொண்டார் ஜே.பி.ரொட்ரிக்ஸ்.ஆகஸ்ட் புரட்சுயிலும்
கலந்து கொண்ட காங்கிரஸ்வாதி ஆவார்.
தென் தமிழகத்தில் போராட்னத்தக்கு ராஜாஜி தலைமையேற்க வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,ரொட்ரிக்ஸ்சும் தொண்டர் படை தலைவர்களாக பதவியேற்றனர்.ரொட்ரிக்ஸ் அதோடு விட்டு விடாமல் "சுதந்திர வீரன்" என்ற பத்திரிக்கையையும் தொடங்கினார்.அந்த பத்திரிக்கை தென் தமிழக மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்ததுடன் ,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.

ஆகவே சுதந்த வீரனுக்கு சோதனை வந்தது.
பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த பத்திரிக்கையை
பறிமுதல் செய்ததுடன் ,சுமார் இரண்டரை
இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும்
பறிமுதல் செய்தது.ரொட்ரிக்ஸ் ஓய்ந்து போகவில்லை.முன்னைவிட போராட்டத்தில்
தீவிர ஈடுபாட்டை காட்ட தொடங்கினார்

அவர் அடைந்த போராட்ட தியாகங்கள்...

* உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஒரு ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலடைக்கப்பட்டார்.

*தூத்துக்குடி இந்தி விடுதலைக்காக ரொட்ரிக்ஸ் நடத்திய சுதந்திர வீரன்
பத்திரிக்கை தடை செய்யப்பட்டு இரண்டரை இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வெள்ளையர் அரசு பறிமுதல் செய்தது.

*கள்ளுக்கடை மறியல் மறியல் தீ வைப்பு போராட்டத்தில் ஈடுபட்டராக ரொட்ரிக்ஸசும் அவர் மனைவி ரொஸலின் கொரைராவும் ஒரு வருடம் சிறையிலடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் நடந்த முதல் கள்ளுக்கடை
மறியிலின் போது "அந்நிய தேசத்துக் கடைகளைக் கொள்ளுத்துங்கள்" எனக் கூக்குரலிட்டவர் ரோஸலின்.

சுதந்திர போராட்டத் தியாகியான ஜே.பி ரொட்ரிக்ஸ் _ரோஸலின் தம்பதியினருக்கு
1-கிளாஸ்டன்
2-மாணிக்கம்மாள்
3-சத்யா
4-நெப்போலியன்
5-துரைராஜ்வ
6-பனிமய தாசன்
7-ஏஞ்சலின்
8-ராஜம்
9-ஜவஹர்
10-ஜோதி
11-நோபிள்
12-ரவி
13-பெஞ்சமின்
என்று பதிமூன்று குழந்தைகள்.

1927 , ஆகஸ்ட் 5 ஆம் தேதி,ரொட்ரிக்ஸ் குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்த
பனிமயதாசன் தான் பின்னாளில் தன் பெயரை சந்திரபாபு என்று மாற்றிக்வைத்துக்
கொண்டார்.பிறந்த சில நாட்களிலேயே பனிமயதாசனை கடுமையான விஷக்காய்ச்சல் தாக்கியது.குழந்தை பிழைக்குமோ பிழைக்காதா என்ற நிலை.
ரொட்ரிக்ஸும் - ரோஸலினும் ,தூத்துக்குடியில் கடற்கரையோரம் அமைந்துள்ள பனிமய மாதா தேவாலயத்திற்குச் சென்று குழந்தையைப் பிழைக்க வைக்கும்படியும்,குழந்தைக்கு மாதாவின் பெயரை வைப்பதாகவும் மனமுருக
வேண்டினர்.குழந்தை பிழைத்துக் கொண்டது.

குடும்பத்தில் எல்லோராலும் "பாபு" என்று
அழைக்கப்பட்டு,எந்த கவலையும்
இன்றி "சுதந்திர வீரனாக" வளர்ந்தான்
சந்திரபாபு.முழுப் பெயர் பனிமயதாசன்
இவர் பரதர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ,பரதர் சந்திரகுலம்
என்பதால் இனத்தின் மீதுள்ள பற்றால்
தனது பெயரை சந்திரபாபு என மாற்றிக்கொண்டார்.சிறுவயதிலிருந்தே
ஏழுகடற்துறையிற் ஏக அடைக்கலமாம்
பரதர் மாதா என்றழைக்கப்படும் பனிமய மாதாவின் தீவிர பக்தனாகவே வளர்ந்தார்
இவர்.

சிறுவன் சந்திரபாபு மிக அழகாக இருப்பார்
அண்டைய வீட்டாளர்களிடம் சகஜமாக பழகுவார்.நவராத்திரி நாட்களில் ,கொலு வைத்திருக்கும் வீடுகளுக்கு வேஷம் போட்டு
சென்று பாடல் பாடுவார்.

படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லை.அந்த சிறுவயதிலேயே சினிமா ஆர்வம் கொண்டார்..

1939 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம்
செய்ததற்காக சிறை சென்றார் ரொட்ரிக்ஸ்

சிறுவன் பாபுவோ ,இந்த கவலைகள் இன்றி
குற்றாலத்தில் தீரர் சத்தியமூர்த்தியின்
குடும்பத்துடன் ஆனந்தமாக இருந்தான்.அப்போது அவனுக்கு வயது
11 ,சந்திரபாபுவையும்,சத்தியமூர்த்தி மகள்
லட்சுமியையும் கவனித்து கொண்டவர் காமாரஜ். ஆம் முதலமைச்சர் காமாராஜர் தான்.காமராஜர் சத்தியமூர்த்தியின்
தொண்டராக இருந்தவர்.
சந்திரபாபுவையும்,லட்சுமியையும்
கவனிக்கும் பணி காமாரஜருக்கு கொடுக்கப்பட்டிருந்து...
.ரொட்ரிக்ஸ் விடுதலை அடைந்ததும் அவர்
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டார் கடத்தப்பட்ட நாடு
இலங்கை.

சத்தியமூர்த்திக்கு ரொட்ரிக்ஸ்சிடம் இருந்து கடிதம் வந்தது...அதில் தன் மகன் சந்திராபுவை இலங்கைக்கு  அணுப்பி வைக்கும் படி கேட்டிருந்தார் ரொட்ரிக்‌ஸ்.
சத்தியமூர்த்தியும் ரொட்ரிக்ஸின் வேண்டுகொளுக்கு இணங்க சந்திரபாபுவை இலங்கைக்கு அணுப்பி வைத்தார்.

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதும்
அங்கேயும் ரொட்ரிக்ஸின் சுதந்திர உணர்வு தூங்கவில்லை அங்கேயும் ஆரம்பித்தார்
காலச்சக்கரம் என்ற வாரப்பத்திரிக்கை

1942 ஆம் ஆண்டு உலகப்போரின் கைகளில் கொழும்பு சிக்கிக்கொண்டது.
ஈஸ்டர் தினத்தன்று,கொழும்பில் ஜப்பானியர்கள் குண்டு போட்டனர்.இதையெடுத்து அங்கிருந்த
மக்கள் பாதுகாப்புக்கு வேறு இடம் தேடினர்.ரொட்ரிக்ஸ் குடும்பமும் வேறு இடம் தேடி ஹட்டன் நகரை நோக்கி இடம் பெயர்ந்தனர்.ஆனால் ஹிட்டனிலும் அவர்களை விதி விடவில்லை,அங்கே பிழைப்புக்காக கடை ஒன்றை நடத்தினார்
ரொட்ரிக்ஸ் அதிலம் நஷடம் ஏற்பட்டது.
இலங்கையில் இனிகாலம் தள்ள முடியாது
என்ற நிலையில் இந்தியாவுக்கு திரும்பிவிடலாம் என்று முடிவு எடுத்த்து..
ஆனால் அவர்கள் தங்கள் சொந்த ஊரான
தூத்துக்குடிக்கு செல்லாமல்..சென்னைக்கு வந்தது.

1943 இல் சந்திரபாபுவின் சினாமா கனவுகளோடு சென்னையில் காலடி எடுத்து வைத்தார்....

இது விடுதலைப்போராட்ட வீரரின்
சிறு தொகுப்பே தவிர முழு வரலாற்று தொகுப்பு  அல்ல....
வரலாறில் மறைக்கப்பட்ட
சுதந்திர வீரர் ஐயா ரொட்ரிக்ஸ் அவர்களுக்கு சிலை ஒன்று வைக்கப்பட வேண்டும்....
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில்...

எகிப்து நாட்டை ஆண்ட தமிழ் பேரரசன் பரவன் தமிழ் வேந்தன் கி.மு 4000

#எகிப்தில்_செங்கோல்_ஓச்சிய
#பரவன்_என்ற_தமிழ்_வேந்தன்
#கி_மு_4000

சிந்து வெளியில் உள்ள பரவர் என்ற நாட்டை
"நிலாப்பரவர் (சந்திரகுலத்தர்) ", "பகல்பரவர்"(சூரியகுலத்தர்)", என்ற இரு இனத்தவர்கள் ஆண்டதாக சிந்து சமவெளி
கல்வெட்டு செப்பேடுகள் கூறுகின்றது
இப்பரவர் எகிப்தை ஆண்டது மட்டுமின்றி
ஆப்காணிஸ்தானம்,பலுஜிஸ்தானம்,மெஸபோட்டோமியா,முதலிய நாடுகளிலும் பண்டைய நாளிலும் பரவி வாழ்ந்தனர் இத்தமிழ் பரவர்கள்.
ஆப்கானிஸ்தானம்,பலுஜிஸ்தானம் என்ற நாடுகளில் தமிழ் மொழியுடன் சம்பந்தமுடையதாய் வழங்கும் "பிராகி" எனும் பாஷையும் புராதன வடநாட்டின் தமிழருக்கோர் எடுத்துக்காட்டாகும்.
பிராகி,பாலி,திமில் என்ற பாஷைகள் தமிழின்
சிதைவுகள் என  ஆசிரியர் "ஷன்டர் " (hunter)
கூறுகின்றார்.இப்பரவன் எனும் தமிழ் வேந்தன்
கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன் செங்கோல் செலுத்தினான் இவன் காலத்தில்
யூதர் ,யவனர்,உரோமர் என்பவர் இவன்பால்
தமநு நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களையும்,வித்தைகளையும்
கற்றார்கள் என மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார். இவ்வரசன் யானைக்கொம்புகளிலும்,பப்பீரஸ் ஓலைகளிலும்
கலன்களிலும்,கடற்பாறைகளிலும்,படைபயிற்றல்,கப்பல் கட்டல்,தெய்வந்தொழுதல் ,முதலிய காட்சி
களையும் வரலாறுகளையும் வரைந்துவரும் ஓவியர்களுக்கு பரிசளித்து வந்தான்.
இதனால் எகிப்தியர்கள் இந்த பரவரை "கொடை வள்ளல் " எனப்போற்றினர் இவன் மாந்தரிகத்தில்
மிகவும் தேர்ச்சிப்பெற்றவன் "மந்திர ஒலிகளாற் செய்யக்கூடிய மாற்றங்களையும் தமிழர் அறிந்திருந்தனர்" என அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்
கா.சுப்பிரமணியப் பிள்ளை எம்,ஏ,எம்,எல்
அவர்கள் எழுதிய "தமிழர் சமயம் " கூற்றும்,

     " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
        மறைமொழி தானே மந்திரமென்ப "
என்னும் தொல்காப்பியர் சூத்திரமும்
சித்திக்கற்பாலென்கின்றன... கெய்லோவிலுள்ள
இவ்வரசனின் கல்லரையைப் புதைப்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் திறக்க முயன்ற போது
திடிரென மறனத்திற்குள்ளாயினர்.ஆதாரத்துடன்
அடக்கஞ்செய்யப்பட்ட அரசனின் கல்லறையைத்திறந்து தீண்டிப்பார்த்ததால் இறந்த
இறைவனின் ஆவி அனைவரையும்  கொலைசெய்வதது என்று எகிப்து மக்கள்
சொல்லி அச்சமுறுகின்றனர்.இப்பரவன் எனும்
தமிழ் மன்னனை "பாவோன்" எனவும் "எழுதுவர்
நூலாசிரியர் பரவன் என்னும் சொல்
பரவோன் எனவும் பார்வோன் என நீண்டு
வழங்கின என்ப...எகிப்தியர் இப்பரவன்
மீனன் என்னும் பரதவர் வழி தோன்றிய
பார்வோனை "பாரோ" என்பர். இப் பாரோ
என்னுஞ் சொல்ல் பரவன் எனும் தேம்பேடு
தமிழ் சொல்லின் திரிபாகும்.எகிப்திய குடிமக்கள்
இப் பார்வோன் அரண்மனையுடையான்
என்னும் பொருளை "பெரா"என அழகப்பர்..
இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்
"மோசே" எனும் கிறிஸ்துவ மாகாத்மவால்
எழுதப்பட்ட விவிலிய நூலில் கூறப்படும்
பார்வோன் மன்னர் யாவரும் பரவர் என்ற
தமிழரசர்களே "எகிப்து நாட்டை தம் கீழ்படுத்தி
அங்கு அரசாட்சி நடத்தியவரும் இப் பரதரே
எனபண்டிதர். சவேரியாப்பிள்ளை,எம்,ஆர், எஸ்,அவர்கள் எழுதிய "தமிழர் பழமை "
என்ற நூலும் இதை வலியுறுத்துகிறது....

இதன் மூலம் இப்பரதர்கள்
தமிழ்நாட்டில் பாண்டியராகவும்
எகிப்தில் பரவராகவும்
ஆண்டவர்கள் என்பது..உறுதியாகிறது....