Sunday, 16 October 2016

மாபரத்தி டான்_மரிய_மார்கரிட்_டிக்ரூஸ்_பரதவர்ம_பாண்டியமாதேவி

#மாப்பரத்தி,#போர்_மறத்தி,பெரும்படை கொண்ட
பெண்ணாத்தாள்.
#டான்_மரிய_மார்கரிட்_டிக்ரூஸ்_பரதவர்ம_பாண்டியமாதேவி (1562-1565)
வடநாட்டு ஜான்சி
ராணிக்கும்,தென்னாட்டு வீரமங்கை
வேலுநாச்சியாருக்கும்
முன்னரே,கன்னிப்பெண்ணாய் படை
நடத்தியவர் இந்த பாண்டியமாதேவி..
கொற்கை #பரதவர்_படை,ஆப்பநாடு
கொண்டயம்கொட்டை #மறவர்_படை,நாகப்பட்டினம் #பரதவர்_படை
என்று மூன்று படைகளை
வழிநடத்தி மாப்பரத்தி,போர்
மறத்தி,பெரும்படை கொண்ட
பெண்ணாத்தாள் என்று பெயர்
பெற்ற நாயகி இவர்..
1562 ஆம் ஆண்டு பாண்டியபதி
மறைவிற்கு பின்,ஆண்
வாரிசில்லாத
கொற்கையையும்,ஏழ
ு கடற்துறையையும் விசுவநாத
நாயக்கன்,கைப்பற்ற படையெடுத்த
போது ஆட்சியை ஏற்று,
பெண்ணென்று துச்சமென
எண்ணிய நாயக்கனை
மதுரைவரையில் துரத்தி
தாக்கவல்ல ஒரு மாபெரும் படையை
உருவாக்கி வென்றவர்.
வரலாற்றில் விடுபட்டு
போனவர்,இந்திய சுதந்திர
வரலாற்றுக்கு முந்தைய வீர
வரலாற்றின் வீரப்பெண்மணி..இது
ஒரு பெண்ணின் வரலாறல்ல,தமிழ்
மன்னர் குல மகளிரின் வீர
வரலாற்றுக்கு சான்று.இவர்
மட்டுமல்ல,இன்னும் பற்பல
வரலாறுகள் இம்மண்ணில்
மறைந்துள்ளது,வெ
ளிக்கொணர்வோம்..

No comments:

Post a Comment