Thursday, 31 August 2017

எம் பரத்திக்கு

நெய்தல் நில பரத்திக்கு நெய்தல் தமிழன்
சகோதரனின அன்பு வேண்டுகோள்.

உப்புக்காற்றில் என்னோடு வளர்ந்தவளே
                                              - நலமா ?
வீரத்தை என்னோடு குருதியில் பகிர்ந்தவளே
                                              - நலமா ?

வான் திமிர் கொண்ட ஆணையும் மதி
                              - கொண்டு வெல்பவள் நீ
உன் கைவிரல் பிடித்ததால் ஓடிய குருதி
                                  -ஆறும் அறியனும் நீ

கற்புக்கரசி கண்ணகி வழி வந்தவள் தான்
                          -  அதுவும் நினைவு கொள் நீ
உலகமே வியந்த தமிழ்  தேசியதலைவரின்
                                            - சகோதரி நீ

கிறிஸ்தவ கத்தோலிக்கத்தின் வேறூண்றிய
                                          - ஆணி வேர் நீ
பார் ஆண்ட பரத இனத்தின் வலிகளையும்
                                            - அறிவாயா நீ

உன் இனத்தை தாங்கி பிடிப்பாயா ! தூக்கி
                                             - நிற்பாயா ?
பிளவுண்ட இனத்தின் விரிசல்களை பூசி
                                             - காற்பாயா ?

உனக்கு அறிவுறை கூற நான் அறிவாளி
                                   -  உன்னை விட அல்ல
உன்னிடத்தில் கெஞ்சி கேட்கிறேன் நீ
                              - என் இனத்தின் தாயல்ல

கல்வியின்  சிகரம் தொடு...
அதிகாரத்தில் ஆணி வேர் தொடு....
வீரம் கொண்டாலும் மதியை எடு...
வீழ்ந்த இனத்திற்கு எழுச்சி கொடு....

குறிப்பு...

பரத ஆண்களே கொஞ்சம் வழி விடுங்கள்
உங்கள் ஆணாதிக்கத்தை மீண்டும் திணிக்காதீர்கள்.

என் இனம் என உன்னோடு அவள் பேசுகிறாள் என்றால்  நீ அவள் அரண் என நினைத்து... அதை சிதைத்துவிடாதே...

நாளைய இனத்தின் விடியலை இருளில் கிடத்திவிடாதே...

    என்றும் நெய்தல் தமிழன் ✍🏻
         

Friday, 11 August 2017

எம் நெய்தல் பரதா !

என் நெய்தல் நில பரத உறவுகளுக்கு வணக்கம்.

கடந்த மூன்று வருடங்களாக நம் இன இளைஞர்களிடத்தில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏதோ ஒன்று பின்னால் சுற்றி திரிந்த காளை கூட்டம் இன்று ஒரு சேர சமுதாயம் என்னும் உணர்வை மனதில் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

சினிமா நடிகர்களை தலையில் தூக்கி திரிந்த காலம் சற்று மாறி நம் இன வீழ்ச்சியை உணர்ந்து வரலாற்றை கையில் ஏந்தி நான் பாண்டியன் என உறும ஆரம்பித்துவிட்டது  !

சமுதாய இளைஞர்கள் , இளம் பெண்கள் சமுதாயம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இனி கவலையில்லை இழந்த வரலாற்றை நிச்சயம் மீட்டெடுப்போம் அது உறுதி நாங்கள் மீண்டும் எடுத்தே தீருவோம் இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தியே தீருவோம் அடுத்து என்ன செய்வது ?

வரலாற்றை பற்றி பேசியது நமது நிலமையை உணர , நம் இழப்புகளை உணர , சமுதாய உணர்வு பெற ! அதுவும் இன்று நடந்தேறிக்கொண்டிருக்கிறது சில பேர் யோசிக்கலாம் அப்படியா என்று. ஆம் அப்படிதான் நாங்கள் இங்கே கூறுவது 100% இளைஞர்  , இளம்பெண்களை பற்றி
ஆம் எம் இளைஞர்களே உங்களைப்பற்றிதான். உணர்வு ஒட்டுமொத்தமும் பெறாவிட்டாலும் கடந்த மூன்று வருடத்தில் பெற்றவர் ஏராளம் !

இன உணர்வோடு கிளர்வுற்று என் இனத்திற்கு என்ன செய்யப்போகிறேன் என சிந்தித்து கொண்டிருக்கும் சகோதரர் சகோரிகள் ஏராளம்.

இதைப்பற்றி சமுதாய பெரியவர்கள் பலரோடு உரையாடி சில வழிகள் கிடைத்தது. நம் சமுதாயத்தின் நாளைய மாற்றத்திற்கானதாக உள்ளது ! இதை என் இளைஞர், இளம் பெண்களிடம் ஒப்படைக்கிறேன். நாம் தான் இதை செய்ய வேண்டும் செய்ய போகிறோம்.

நமது முயற்சி பல முற்போக்கு சிந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில்

1. சமுதாய உணர்வின் படி ஒருங்கினைதல் , 2. சமுதாயத்தின் கல்வி வழிகாட்டல் , 3. வேலைவாயப்பு வழிகாட்டல்

இந்த மூன்றும் தான் ஓர் இனத்தின் மிக தெளிவான கட்டுமானம். அதை நம் இனத்தில் கட்ட வேண்டும்.இதை இன்றைய இளைஞர்கள் நாமே செய்திட வேண்டும்.

ஒவ்வொரு ஊர்களிலும் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் , படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் மாணவர்கள், வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் என இந்த மூவரும் ஓர் குழுவாக இணைதல் வேண்டும்.

குழு என்றதும் என்னதோ ஏதோ? என நினைத்துவிட வேண்டாம். நாம் நமக்கு தெரிந்தவற்றை நம் உறவுகளுக்கு பகிர்வது போதும். அது ஒரு குழுவாக இருப்பது பலம் !

ஊதாரணமாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் ஒர் கல்லூரியில் படிக்கலாம்
ஊதாரணமாக Law  படிக்கிறார்கள் என்றால் அவர் கல்லூரி அவர் படிப்பு அவர் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் அவர் மூலம் அப்படிப்பு பற்றிய தகவல்களை சேகரித்து குழுவில் படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பகிர்தல் வேண்டும். அப்போது கல்லூரி படிப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு அது ஒரு வழிகாட்டுதலாகவும் ஒரு வேளை அந்ந கல்லூரியில் படிக்கும் வேளையில் அந்த மாணவர் உதவி பெறலாம். இது ஒரு குழுவாக அமைந்து இப்பணி தொடர்ந்தால்

அடுத்த அடுத்த மாணவர்களின் பயணம் சமுதாய வழியில் ஒரு நல்ல சிந்தனை நோக்கிய பயணமாக அமையும்.

அடுத்து படித்து முடித்த இளைஞர்களும் வேலையின்றி இருக்கும் இளைஞர்களும்.

உதாரணமாக நம் குழுவில் ஒரு இளைஞர் அரசு துறையில் ஓர் உயரிய இடத்தில் அமரலாம் அப்போது அது பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட வேண்டும் அப்போது அந்த படிப்பு படித்து அந்த வேலை தேடும் மற்றும் அந்த படிப்பு படித்து கொண்டிருப்போர்களுக்கு அந்ந நபரின் உதவி ஒரு வழிகாட்டிதலாக அமையும் !
இது தொடர்ந்தால்  நம் சமுதாயத்தில் நாளை சிறந்த ஆட்சி பீடங்களில் நிச்சயம் அமர முடியும் நம் குழுவில் சில மாணவர்கள் அரசு தேர்வுக்கு பயிற்சி எடுக்கலாம். அந்த புத்தகங்களை குழுவில் அதே பயிற்சி எடுப்போருக்கு கொடுக்கலாம் இது தொடர்ந்தால் ஒரு பெரும் மாற்றமே உண்டாகும்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு குழுவாக இருக்கும் அனைத்து குழுக்களும் ஒன்றாக இனைத்துவிடலாம். முறையாக அந்த சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டால்.

குழு என்றதும் எங்கோ எண்ணத்தை செலுத்த வேண்டாம் மேற்கூறப்பட்ட மூன்று திட்டங்களை கொண்டு இளைஞர்கள் நாம் இனைவதே இந்த குழு  !

இப்படி அனைத்து ஊர் குழுக்களையும் இணைக்கும் வேலையில் ஓர் பெரும் மாற்றம் அப்போது தெரியும் !

இது நமது சமுதாய உணர்வில் ஒருங்கினைப்பு , சிறந்த கல்வி வழிகாட்டல், நல்ல ஆட்சி அமர்வு ,நல்ல வேலை

என எண்ணங்களை நிறைவேற்றும் வழியாக அமையும்.

எ.டு இராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் ஊரை சேர்ந்த இளைஞர்கள் இதை கையில் எடுத்து கடந்த மூன்று வருடங்களாக Fisherman HUP  என்ற குழுவாக இனைந்து பல நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர்
அதை போல் நம் சமுதாயமே அதை கையில் எடுக்கலாமே !

என் இன இளைஞர்களே !
எம் சகோதரிகளே !  ஒரு தாய் மக்கள் தான் நாம்  ! என்ற உணர்வோடு இனணவோம் !

ஒற்றை குறிக்கோளை கொண்டு பயணிப்போம் !

நல்ல கல்வி  !  நல்ல ஆட்சி அதிகாரம் !
நல்ல வேலைவாப்பு !

இந்த மூன்றையும் அமைக்க சமுதாய உணர்வை கொண்டு இளைஞர்கள் நாம் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் !

இதை பதிவாக எண்ணிவிடாதீர்கள்

இதை செயலாக்க ஆசைப்படுகிறோம் !
எங்களுடன் கைகோர்த்து ஓர் குழுவாய் இனைய வாருங்கள் !

ஒவ்வொரு ஊரிலும் இக்குழு உருவாக்கப்பட வேண்டும் !

சும்மா கமெண்டு போட்டு கடந்து சென்றுவிடாதீர்கள்...

இன்றே தொடங்க முயற்சிப்போம் ஓர் குழுவாக இணைய !

உங்கள் பதிலை( கமெண்ட்)  ஏதிர்பார்த்து அல்ல !
உங்கள் செயலை எதிர்ப்பார்த்து அன்பு சகோதரன் !

Wednesday, 9 August 2017

நெய்தல் பரதா !

நெய்தல் நில உறவுகளுக்கு வணக்கம் !

பார் போற்ற வாழ்ந்த இனம் பரதர் என்பதில் ஐயமில்லை !  நெய்தல் நிலத்தில் தலைமகனாக ! மீன் கொடி கட்டி
ஆண்டு பாண்டியனாக ! அதன் எச்சங்கள் இன்று பல போர்வைகள் கொண்டு மூடப்பட்முள்ளதை நம் கண் கூட காண முடியும் ! தூத்துக்குடியில் நம் கடைசி மன்னரான பரதவர்ம பாண்டியாபதி (தேர்மாறன்) அவர்களின் அரண்மனை இன்று ஒட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வருடம் நம் பரதர் மாதா திருவிழாவிற்கு சென்றிருந்த போது அங்கே செல்ல முயன்றோம் அப்போது ஒருவர் வந்து தம்பி இது ஒட்டல் உள்ளே எல்லாம் போக முடியாது இது அரண்மனையாக இருந்தாலும் இப்போது இது எங்கள் இடம் என்றார். அந்த நொடி இதயம் சற்று கணத்தது பார் புகழ்ந்த ஐயா தொன் கபிரியேல் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியன் அவர்கள் வாழ்ந்த அரண்மனக இன்று ஓட்டலா ?  இது மட்டுமா இன்னும் எத்தனை அவர் கல்லறை கல்வெட்டு தூத்துக்குடி லசால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சாக்கடையில் கிடந்தது உலக புகழ் பெற்ற தூத்துக்குடி மாதா தேரை கட்டியவர் இவர் தான் இவருக்கு கொடுக்கப்பட மரியாதையை நன்றாக பாருங்கள் !

இது மட்டுமா தூத்தக்குடியின் அனைத்து சமுதாயத்தவரும் போற்றும் வகையில் வாழ்ந்த தூத்தக்குடி மாநகருக்கு தண்ணீர் தந்த இராவ் பகதூர் குரஸ்பர்னாந்து நிலமையும் சொல்ப்போனால் இப்படித்தான் என்ன சிலை மட்டும் ஒரு பேருக்கு வச்சிருக்காங்க ! இந்த மாநகராட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் இவர் !

சரி நடந்தது நடந்தது நடந்து முடிந்தது தூக்கி போடுவோம் ! நான் இங்கே கேட்கும்கேள்வி ?  நாளைய நம் இனத்திற்கு நமது நன்றிக்கடன் என்ன ? நம் பெற்றோர் செய்ய மறந்ததை நாம் செய்யப்போகிறோதா இல்லையா ?

எங்கோ ஒரு மீனவன் கடலில் இறக்கிறான் என்றால் உங்களுக்கு வலிக்குமா ? வலிக்காதா ? மனம் துடிக்குமா துடிக்காதா ?

எனது கேள்விகள் அனைத்தும் இன்றைய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் என எம் வருங்கால சமுதாயத்திடம் மட்டுமே !

நமக்கு பிரச்சனைகளே கிடையாதா ?

பெரும் பிரச்சனை மீனவர் பிரச்சனை
அதை தடுக்க நம் இனம் போதாதா ? போதும் ஆனால் ஒன்றுபட வேண்டும் ! அதுதான் முடியவில்லை !

நம் சமுதாயத்தில்  படித்தவர்களே இல்லையா ? ஏன் அரசு துறைகளில் ஒருவரை கூட காண முடிவதில்லை ?

எங்கே சென்றனர் ? 

உங்களைத்தான் கேட்கிறேன் எங்கே செல்லப்போகிறீர்கள் யாரையோ சொல்வது போல் படிக்காதீர்கள் உங்களை பற்றி தான் பேச போகிறீர்கள் உங்களால் கலைக்டர் ஆக முடியாதா ? சமுதாய உணர்வு உண்டா சமுதாயத்திற்கு  எதாவது செய்யனும் என்று ஆசை இருக்கிறதா ?  அப்போம் கலைக்டர் ஆகலாமே அது இல்லாட்டி அதற்கு அடுத்து
ஐ.பி.எஸ் ஆகலாம் !  ஐ.பி.எஸ் ஆகி எதாவது உதவி பன்னலாமே இப்படி இந்த இரண்டு இல்ல ஆயிரம் இருக்கு ! அனைத்திலும் அமரலாமே ?

சரி அரசு துறை இருக்கட்டும்.

தொழில் பற்றி பேசுவோம்.

நம்ம ஆட்கள் ஒரு தொழில் செய்றாங்க ஒரு வியாபாரம் அதற்கு நம்ம ஆதரவு அளிக்க வேண்டுமா ? கூடாதா ? அங்கே என்ன பொருள் வச்சிருக்காரோ அந்த பொருள நம்ம ஆட்கள் கிட்ட போய் வாங்குங்க ! அப்போம் தான் தொழில் துறையிலும் முன்னேற முடியும்  !

அடுத்து திருமணம் !

இது தான் நான் பேசுன அந்த எதிர்காலத்தற்கு அஸ்திவாரம் இதை ஒழுங்கா போட்டாத்தானே ஏதிர்காலம்னு ஒன்னு இருக்கும் இல்லன்னா இல்லாமலே போகும் !

சகோதரர்களே ! சகோதரகளே !

இதைப்பற்றி பல பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.அதனால் சுறுக்கமாகவே கூறுகிறேன். தயவு செஞ்சி கலப்பு திருமணம் செய்யாதீங்க காதல் உங்க கண்ண மறைக்கும் கொஞ்சம் சிந்திங்க ! நீங்க பிறந்து வந்த இனத்த ! இது வாழனுமா ?
அழியனுமா ?

பிரச்சனைகளை பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கிட்டேத்தான் இருக்கனும் இப்படி !

நம் சமுதாயத்தின் நாளைய மாற்றம் இன்றைய இளைஞர் கூட்டம் ! அதிலும் முதன் முதலாய் எம் சகோதரிகள் கூட்டம் !

நீங்களின்றி நம் இனம் மாறாது !

நடந்ததை மறப்போம் ! நாளை நல்லதென அமைப்போம் !
சிறுதுளி கடலாய் இணைவோம் !

எம் பரத குல இளைஞர் , இளம்பெண்களே !
விழித்துக்கொள் ! நாம் நம் இனத்திற்காக செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு !
தூக்கிவிட வேண்டிய பொறுப்பும் உண்டு !

ஒன்றுபடுவோம் !  வெற்றிப்பெறுவோம் !

உங்கள் அன்பு சகோதரன் !

நெய்தல் தமிழன் !
     - இருதய ஆஸ்ட்ரோ.த

Sunday, 2 July 2017

துரோகியின் உண்மை முகம் !

இனத்துரோகியின் கதை !

இவர் யார் என்பது நிச்சயம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பெயர்: அமல் அரசு
சொந்த ஊர் "ஆறுமுகநேரி" இருப்பது தூத்துக்குடி. இவர் கடந்த வருடங்களாக "பரதர் சமூக வழிகாட்டி " என்ற அமைப்பை நடத்தி வந்ததும். பரதர் சமூக வழிகாட்டி என்ற இதழ் 5 வரை வெளியிட்டு பின் நிறுத்தப்பட்டதும். பின் "தமிழ் சமூக கூட்ம்மைப்பு" என்ற அமைப்பை இப்போது தலைமையேற்று மண்ணிக்கவும் அவரே உருவாக்கி நடத்துகிறார். என்பதும் அனைவரும் அறிந்திருக்க கூடும். அறிந்திருக்காவிடிலும் அறிந்து கொள்ளுங்கள். தன்னைப்பற்றி தெரிநவதைக்காட்டிலும் தன் எதிரி பற்றியும் துரோகி பற்றியும் அறிவது முக்கியம் !

ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு நபர் என்னிடப் தொடர்பு கொண்டு மிக சமுதாய உணர்வோடும் சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் கூறிக்கொண்னிருப்பார். அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் நேரடியாக எந்த செயலும் செய்ய முடியாமல் யார் மூலமாவது செய்யலாமா என்று  ஏங்கி கொண்டிருந்தார்.அவர் ஏற்ப்பாட்டில் கன்னியாகுமரியில்  முதல் கருத்து கூட்டம் நடைப்பெற்றது.அதில் தான் அமல் அரசு அவர்களுடன் சந்தீப்பு ஏற்பட்டது அப்போதே பல சமுதாய உணர்வாளர்கள் எச்சரித்தார்கள் தம்பி அவரை நம்பாதே என்று. இருந்தாலும் அவரை நம்பினேன். நம்பும்படி பேசினார். பின் அந்த நபரின் முயற்சில் சில கூட்டங்கள் நடைப்பெற்றது.பின் அவரது சில வேளைகளின் காரணமாக தொடர்ந்து செயல் பட முடியவில்லை பின் கூட்டங்களும் நடைபெறுவது நின்றுவிட்டது. பின் சில மாதங்கள் கழித்து அந்த நபர் என்னை தொடர்பு கொண்டி தம்பி தூத்துக்குடியில் என் செலவில் அமல் அரசுவை வைத்து 'பரதர் சமூக வழிகாட்டி" என்பதை உருவாக்கியுள்ளேன். நீ அவர்களுடன் இனைந்து செயல்படு என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சிரிய பிரச்சனைகளால் என்னால் செயல்படவில்லை. வெளிநாட்டில் உள்ள அந்த நபரும் 50,000 க்கும் மேல் பணம் உதவி அமல் அரசுவிற்கு கொடுத்து அந்த அமைப்பு உருவாவதற்கும் மிக  தூணாக இருந்தார். பின் இதழ் வெளியீட்டீற்கு சந்தா பணம், விளம்பரம் பணம் என இதழுக்காக என்று அனைவரிடமும் வாங்க ஆரம்பித்தார்.

ஒரு முறை சமுதாய உணர்வுடைய சில இளைஞர்களிடத்தில் உதவி கேட்டு அவர்களும் இவருக்காக சில சந்தாக்களும் பல தொழிழதிபர்கள் தொலைபேசி எண்களையும் நன்கொடை வாங்க வாங்கி கொண்டு சென்றார்.

பின் அந்த  அமைப்பு சில தனிபட்ட அவரது வழியில் சென்றது.வெளிநாட்டில் இருந்து சமுதாய உணர்வோடு உதவி செய்ய அந்த நபரை  தேவை முடிந்ததும் தூக்கி எறிந்துவிட்டார்.பின் புத்தகமும் நின்று விட்டது. இவருக்காக சந்தா வாங்கி கொடுத்த்தற்கு தம்பி அந்ந நபருக்கு சந்தா வாங்கி கொடுத்தீர்களே புத்தகமும் காணோம் , அதற்கும் பதிலும் வரல அப்போம் சந்தாவ திருப்பி தாங்க என்று வீட்டிற்கு பணம் கேட்டு ஆள் வந்த நிலமையையும் சமுதாய உணர்வு கொண்டதால் சந்தித்தோம்...

இவரால் சமுதாய உணர்வு கொண்ட நபர் பலர் சமுதாயமே வேண்டாம் என்று விலகி விட்டனர். ஆனால் இவரோ மிக அழகாக பரதர் சமூக வழிகாட்டியை  தமிழ் சமூக கூட்டமைப்பாக  அழகாக நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி விட்டார்.

இவரை நம்பி சமுதாய வேலை செய்த இளைஞர்களுக்கு இவர் தந்த பரிசு மிக பெரியது துரோகம் இன்று இவரிடத்தில்
இதை தட்டி கேட்டதற்கு எங்களைப்பற்றியே தவறாக பரப்பி கொண்டு உள்ளார். என்ன செய்ய இந்த சமுதாயம் அதையும் நம்பத்தான் செய்யும்.

இவரிடம் புத்தகம் வாங்கி படித்து விட்டு இவரையே எதிர்க்கும் துரோகிகள் என்று எங்களைப்பற்றி பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் புத்தகத்தை வீற்றீர்கள் வியாபாரமாக அதை எங்கள் பணம் கொடுத்து வாங்கினோம்.படித்தோம் இன்று நீங்கள் தூரோகம் செய்தீர்கள் தட்டி கேட்டோம். உங்களிடத்தில் இலவசமாக வாங்கிவர் என்பதுபோல் கூறுகின்றீரே !
புத்தகத்திற்கு மட்டுமல்ல சிறு சமுதாய வரலாற்று பேப்பர்களுக்கு கூட ஒரு ருபாய் என்று சரியாக விலைப்போட்டு சரியாக  வசூலித்து வியாபரம் தான் செய்தீர்கள் எங்களுக்கு தானம் செய்ததைப்போல் குலைக்காதீர்கள். உங்களைப்போல் அல்ல.

சமுதாய பெயரில் ஒரு ருபாய் எவரிமாவது வாங்கினேன் என்றோ யாரையாவது ஏமாற்றினேன் என்றோ ! ஒருவரையாவது சொல்ல வைக்க முடியுமா உங்களால்.

உனக்கு யார் தருவார் என்று கேட்காதீர்கள் வரலாற்று புத்தகம் வாங்கி பிறருக்கு படிக்க கொடுப்பதற்கோ அதை நகல் எடுத்து கொடுப்பதற்கொ செலவுக்கு தம்பி எவ்ளோ வேண்டுமென்றாலும் தாரேன் என்று மட்டுமல்லாமல் தந்த்தையும் வேண்டாம் என்கு திருப்பி கொடுத்துள்ளேன். இன்று மட்டுமல்ல எப்போதும் வாங்க மாட்டேன் என்னால் இயன்றதை செய்வேன்.

உங்களிடம் புத்தகம் வாங்கிய அந்த ஆயிரம் ருபாய் கூட எனது பெற்றொர் எனக்கு கல்லூரிக்கு தினம் செலவுக்கு தரும் பனத்தை சேகரித்த பணம் தான் அந்த ரூபாய் ! 

சமுதாய உறவுகளே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இதுபோன்வர்களிடத்தில் ஏமாந்து சமுதாயம் சீரழித்தது என்ற நிலைக்கு தள்ளாதீர்கள்.

நிச்சயம் இவரைப்பற்றி கூறியதிற்கு என்னையும் இவரை எதிர்த்த சமுதாய உணர்வுடைய எம் தோழர்களை பற்றியும் நிச்சயம் தவறான தகவல்களை கூறுவார்.ஆனால் நிறுபிக்க முடியாது. ஆனால் நாங்க நிறுப்பிக்க முடியும் இவருக்கி பல்லாயிரம் கொடுத்து இன்று ஏமாந்து சமுதாயமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களை !

இவரால் எங்களுக்கு பிரச்சனைகளும் வரலாம். பணத்திற்காக சமுதாயத்தை விற்க துனிந்தவர். இந்த உண்மையை சொன்ன எங்களை சும்மாவா விடுவார்.நடப்படு நடக்கட்டும்...நன்றி

மீண்டும் யாரும் இவரைப்போன்றோர்களிடத்தில் ஏமாறாதீர்கள்...

இப்படிக்கு அவரால் ஏமாற்றம் அடைந்த
சமுதாய உணர்வுடைய இளைஞர்கள்...

Tuesday, 27 June 2017

மத்திய அரசே !

இலங்கை கடற்படை அப்பாவி இந்திய மீனவர்களை #கைவிலங்கிட்டு அழைத்து செல்வதை இந்திய அரசு கண்டிக்கவேண்டும்....
#கச்சதீவு_மீட்பே_தீர்வு

இணைவோம் "பரதர் தொலைக்காட்சி "

உறவுகளே நம் சமுதாய நிகழ்வுகளை எங்கு என்ன நடப்பினும்... நல்லதோ கெட்டதோ
இன்ப நிகழ்ச்சிகளோ , துன்ப நிகழ்ச்சிகளோ அனைவரும் தெரிந்து கொள்ள நம் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள  ஆரம்பிக்கப்பட்டதே
இந்த "பரதர் தொலைக்காட்சி" முகப்புத்தக பக்கம் மற்றும் சிறிய இனையதளம்...
உறவுகள் ஆதரவு தந்து ஒன்றாய் இனைவோம்... சமுதாய நிகழ்வுகளை நீங்களும் இதில் பதிவு செய்யலாம்...
அதற்காக தொடங்கப்பட்டதே "பரதர் தொலைக்காட்சி " வாட்சாப் குழு இதில் நீங்கள் பதிவிடும் நிகழ்வுகள் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்படும்... விருப்பம் இருந்தால் இனையவும்...
https://chat.whatsapp.com/JPVwcNhNBAoK1RaVBE2bg2

இனைய தள முகவரி - www.parathartv.blogsbot.com

மணப்பாடு இளைஞர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

தொடர் விபத்துக்களை சந்தித்து வரும் மணப்பாடு கடற்கரையில் , இனிமேல் தங்கள் ஊர்  கடலில் முழ்கி யாரும் உயிர் பலி  ஆகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இன்று மணப்பாடு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தினர்.
வாழ்த்துக்கள் மீனவ உறவுகளே !