Sunday, 13 November 2016

தூத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்

துாத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி : ஏஎஸ்பி., துவக்கி வைத்தார்ஞாயிறு 13, நவம்பர் 2016 
மழை நீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி துாத்துக்குடியில் இன்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.துாத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குருஸ் பர்னாந்து நினைவாகவும், மழை நீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தியும் துாத்துக்குடியில்  "அகில இந்திய பரதர் இளைஞர் பேரவை " நடத்தியது.இன்று மாணவ மாணவியர் பங்கேற்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.பாண்டியாபதி மாதா கோவில் அருகே தொடங்கிய இப்போட்டியை துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000ம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.2000ம் மற்றும் கோப்பையும்,மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கோப்பையும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment